Tuesday, September 1, 2009

தேவானேய பாவாணர்



இவர் கண்டது தமிழ்
இவர் கேட்டது தமிழ்
இவர் உண்டது தமிழ்
இவர் உயிர்ப்பது தமிழ்
இவர் கொண்டது தமிழ்
இவர் கொடுப்பது தமிழ்
இவர் விண்டது தமிழ்
இவர் விளக்குவது தமிழ்

இவர் தமிழை என்பாகவும், குருதியாகவும், தசையாகவும் வாய்க்கப்பெற்றார்....
தமிழ்தாயானவள் எத்தனை தவங்கள் செய்தாளோ, இத்திருமகனை ஈன்றெடுக்க...
தமிழை மீட்க
(தனி)தமிழனை ஈன்ற
தமிழன்னைக்கு நன்றி.........


Sunday, March 22, 2009

தமிழா..................


அண்டை ஆன்டவனும்
விண்ணில் நின்றவனும்
ஈரடி நானூறு நல்லறத்தில்
நல்லகாப்பியமும் வல்லசாத்திறமும்
முங்கி முத்தெடுக்க
என்னவனே ஏனடா
உந்தாயை தனித்து
தருதலையாக திறிகிராய்


சாரு மாடமு தாங்கியு டிப்பன் புட்டு சாரி


அன்று தமிழை இழிவாக நினைத்தால்
இன்று ஈழத்தில் இழவு விழுந்து கொண்டிருக்கிரது
இன்னமும் கோபம் வரவில்லையெனில்
உன்னுடை கோவனமும் கவரப்படுமட.......



Sunday, February 1, 2009

கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை.


வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?


ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.


பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.


உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள்.


தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது.

அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.


என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னைலி99

Saturday, January 3, 2009

பாரதி யார்?




அடிவேரையே பழிக்கும்
முறிந்து விட்ட கிளையில்
முலைத்த முதல்முத்தே!

அதுவரை இதற்குதான்
என்றிருந்த எந்தமிழில்
ஆயுதமும் செய்து
பல
சாதனையும் செய்தயே!

பாராண்ட பகலவன்
பல்லை உடைக்க
பாவால் பலவித்தை
செய்தாயே!



இப்போது
எங்கே அந்த பாரதி????

உரிமை




மகாவம்சத்தின் வரைந்த மீசையை எதிர்த்து
காந்தி வழியில் காத்த வழியை
சிங்க முகமூடியால் சிதைவுற்றதால்
இவன் தலை பிளக்க
மேல்துணை கேட்க மேல்பைட்ட போதுதான்
தெரிநது கொண்டேன் என் முதுகில்
ஐந்து விரல்களால் அடித்து அதில
பத்து இதழ்தாமரை முளைத்திருப்பதை
இதனாலோ என்னவோ
என்னாலும் இன்றுவரை எலமுடியவில்லை


தலைசிறந்த இனமன்றோ
ஏனோ
தலையெழுத்து இதுதானோ
உன்னால்
விழித்ததும் உறைத்துவிட்டது
எனக்கும் தேவைதான்
நாம்விரும்பும் ..............

Tuesday, December 16, 2008

6ஆம்


ஆறறிவாற்றும் அறிஞனே
கவிதையாம் கற்பனையம்
காதலம் காவியமாம்
இது வெல்லாம் இன்பமாம்
கல்வியாம் பெற்ற அறிவம்
மொழியாம் வெறியாம்
மூத்த இனமாம் பற்றாம்
மானமாம் ஈழமாம்
உரிமையாம் விடுதலையாம்
இதல்லாம் எதுக்குயா நாமக்கு
எவன் செத்தா எனக்கென்ன
எதை இழந்தா எனகென்ன
வேலையற்று வேலைக்கு
செல்லாமல் வெறும்




பிச்சைகேட்டு வாழலாம்வா.......

Saturday, December 13, 2008

rahulzதமிழ்


தமிழேதான்

இவள் இல்லா அழகு இல்லை

இவள் இல்லா அறிவு இல்லை

இவள் இல்லா மென்மை இல்லை

இவள் இல்லா தொன்மையும் இல்லை

இவள் இல்லா வீரமும் இல்லை

இல்லாத

மெயிஞானமும் இல்லை விங்ஞானமும் இல்லை

அதனால் ஏனோ

இவளுக்கு இன்னும் ஒரு வீடும் இல்லை